Last Updated : 18 Jul, 2017 12:29 PM

 

Published : 18 Jul 2017 12:29 PM
Last Updated : 18 Jul 2017 12:29 PM

ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து முரண்பாடான அறிகுறிகளையே பெற்றிருக்கிறோம்: ஈரான்

ட்ரம்ப்பின் நிர்வாகத்திடமிருந்து முரண்பாடான அறிகுறிகளையே பெற்றிருக்கிறோம் என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நவீன ஏவுகணை ஒன்றைச் சோதித்துப் பார்த்தது என்பதற்காக ஈரான் மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா.

மேலும் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபரானது முதல் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கு ஈரான் தான் காரணம் என்று குற்றம் சுமத்தி வந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் ஷெரீப் கூறும்போது," ஈரான் உடனான அமெரிக்காவின் உறவில் முரண்பாடான அறிகுறிகளையே ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து பெற்றிருக்கிறோம். இது தொடர்பாக அமெரிக்காவிடம் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

ஈரான் அமெரிக்க உறவில் முன்னேற்றம் ஏற்பட பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளது.

மேலும், ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஒன்றாக செயல்பட்டால் சிரியா மற்றும் ஏமனில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x