Published : 28 Nov 2015 02:18 PM
Last Updated : 28 Nov 2015 02:18 PM
பாகிஸ்தான் மண்ணில் கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாதத்துக்கு 8500 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் 5,532 பொதுமக்கள் பலியாகினர். 10,195 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3.157 பேர் பலியாகினர், 5.988 வீரர்கள் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியிலேயே அதிக அளவிலான உயிர்பலி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 3,759.
பயங்கரவாதக் குற்றங்களுக்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 173 பேர் என்றும் இன்னும் 200 பயங்கரவாதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களால் பாகிஸ்தான் பொருளாதாரம் 100 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT