Last Updated : 20 Nov, 2014 07:18 PM

 

Published : 20 Nov 2014 07:18 PM
Last Updated : 20 Nov 2014 07:18 PM

அசாஞ்சே மீதான கைது வாரண்ட்டை திரும்பப் பெற சுவீடன் நீதிமன்றம் மறுப்பு

தனக்குப் பிறப்பித்த கைது வார்ண்ட்டை திரும்பப் பெற வேண்டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சுவீடன் நீதிமன்றம் நிராகரித்தது.

பாலியல் புகார்கள் தொடர்பாக 2010-ஆம் ஆண்டு ஜூலியன் அசாஞ்சேவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

பாலியல் புகார் தொடர்பாக அசாஞ்சேயை விசாரிக்க சுவீடன் விரும்பியது. ஆனால், ஈக்வடாரில் அவர் தஞ்சமடைந்துள்ளார்.

ஈக்வடாரில் உள்ள லண்டன் தூதரகத்தில் அசாஞ்சே கடந்த ஜூன் 2012-ஆம் ஆண்டு தஞ்சம் புகுந்தார். இவரை பிரிட்டன், சுவீடனிடம் ஒப்படைத்தால், அங்கிருந்து அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தயாராக இருக்கின்றனர்.

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய தகவல் கசிவு வழக்கு அவருக்கு எதிராக அங்கு காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x