Last Updated : 28 Oct, 2015 10:57 AM

 

Published : 28 Oct 2015 10:57 AM
Last Updated : 28 Oct 2015 10:57 AM

இன்று நேபாள அதிபர் தேர்தல்

நேபாளத்தின் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) துணைத் தலைவர் வித்யா பண்டாரி ஆளும் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒருங்கிணைத்த நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹல், பண்டாரியின் பெயரை முன்மொழிந்தார். பண்டாரி தேர்ந்தெடுக்கப் பட்டால், அவர்தான் நேபாளத் தின் முதல் பெண் அதிபராக இருப்பார்.

துணை அதிபர் வேட்பாளராக, மக்கள் விடுதலை ராணுவத்தின் முன்னாள் தலைவர் நந்த கிஷோஷ் புன் ஆளும்கட்சி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் நேபாள் காங்கிரஸ் கட்சியின் குல் பகதூர் குருங் அதிபர் வேட்பாளராகவும், அமிய குமார் துணை அதிபர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நேபாள உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் நாராயண் மஹார்ஜன் அதிபர் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x