Last Updated : 16 Sep, 2016 05:25 PM

 

Published : 16 Sep 2016 05:25 PM
Last Updated : 16 Sep 2016 05:25 PM

பாகிஸ்தான் மசூதி தாக்குதலில் 23 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதி மசூதியில் தற்கொலைப்படை தீவிரவாதி நேற்று வெடித்துச் சிதறியதில் 23 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கில் பழங்குடியின பகுதி மக்கள் பெரும்பான்மையாக வசிக் கிறார்கள். அங்கு பெஷாவர் அருகே ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி புட்மானா என்ற கிராமம் உள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று தொழுகை நடைபெற்றது. அப்போது மசூதியின் நுழைவுவாயில் பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். இதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x