Last Updated : 18 Apr, 2017 01:15 PM

 

Published : 18 Apr 2017 01:15 PM
Last Updated : 18 Apr 2017 01:15 PM

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 8 பேர் பலி

சிரியாவின் கிழக்கு பகுதியில் அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரிய சமூக ஆர்வலர்கள் தரப்பில், "இராக்கின் எல்லையோரத்தில் அமைந்துள்ள சிரியாவின் மேற்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொது மக்கள் 8 பேர் பலியாகினர்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிரிய கண்காணிப்பு குழுவானது சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் பலியானதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக சிரியா மற்றும் இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருவது தொடர் கதையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x