Last Updated : 10 Jan, 2017 05:00 PM

 

Published : 10 Jan 2017 05:00 PM
Last Updated : 10 Jan 2017 05:00 PM

பிலிப்பைன்ஸில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்

தெற்கு பிலிப்பைன்ஸின் செலிபஸ் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இது மிகவும் அடியாழத்தில் ஏற்பட்டதால் சேதம் ஏற்படவில்லை.

சுலு மாகாணத்திற்கு 223 கிமீ தொலைவில் தென்கிழக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆகப் பதிவாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டம் ‘பசிபிக் ரிங் ஆஃப் பயர்’ என்ற எரிமலை, நிலநடுக்க மையத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து பிலிப்பைன் எரிமலை ஆய்வியல் மற்றும் நிலநடுக்கவியல் துறை நிபுணர் ரெனேட்டோ சோலிடம் கூறும்போது, கடலடித் தரைக்கு 625 கிமீ அடியில் உள்ள கண்டத்தட்டுகள் நகர்ந்ததால் இந்த கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இவ்வளவு ஆழத்தில் ஏற்படும் நகர்வுகளினால், சுனாமியோ, பெரிய அளவில் பாதிப்போ ஏற்படாவிட்டாலும் சாண்டோஸ் நகரில் லேசாக உணரப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x