Published : 21 Sep 2018 12:21 PM
Last Updated : 21 Sep 2018 12:21 PM
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தன்சானியாவில் உள்ள பிரபல ஏரியில் பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 40க்கு மேற்பட்ட பயணிகள் பலியாகினர்.
இதுகுறித்து தன்சானியா அரசு அதிகாரிகள் தரப்பில், "தன்சானியாவிலுள்ள உக்கார தீவிலுள்ள ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய ஏரியில் பயணிகள் சென்ற படகு வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில்அதில் பயணம் செய்த 40 - க்கும் அதிகமான பயணிகள் நீரில் மூழ்கி பலியாகினர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை முதல் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "சுமார் 100 பயணிகள் அந்த படகில் இருந்தார்கள். இந்த உயிரிழப்புகள் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார். விபத்துக்கான காரணம் குறித்து தன்சானியா அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT