Published : 02 Sep 2018 12:55 AM
Last Updated : 02 Sep 2018 12:55 AM
பிரேசிலில் ஊழல் வழக்கில்சிறையிலுள்ள முன்னாள் அதிபர்லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட தேர்தல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிரேசிலில் வரும் அக்டோபர் 7-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொழிலாளர் கட்சி சார்பில் லுலா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,லுலா தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கக் கோரி தேர்தல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த7 நீதிபதிகள் அமர்வு லுலா தேர்
தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிட்டது.
முன்னதாக, லுலாவின் பல்வேறு மேல் முறையீட்டு மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியிருந்தது. ஆனால், இதைதேர்தல் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.எனினும், இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக லுலாவின் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள போதிலும் லுலா தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.பிரேசிலில் லுலா டா சில்வா (72) கடந்த 2003 முதல் 2010-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது.ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் லுலாவுக்கு ரூ.6.5 கோடி மதிப்புள்ள வீட்டை அன்பளிப்பாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் கடந்த ஆண்டு லுலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதில் அவரின் சிறை தண்டனை 12 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT