Published : 13 Jun 2019 03:32 PM
Last Updated : 13 Jun 2019 03:32 PM
ஹாங்காங்கில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வன்முறை நீடித்துவரும் நிலையில் அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள், “சீனா கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சந்தேகத்துக்குரியவர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாகவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் போராட்டக்கார்களுக்கு எதிராக ஹாங்காங் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் இதுவரை 66 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10 ஆண்டுகளில் இல்லாத தொடர் வன்முறை காரணமாக ஹாங்காங்கில் முக்கியமான அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்கள் பல போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறும்போது, ” இது பொதுவழி இதனை தடுக்க போலீஸாருக்கு எந்த உரிமையும் கிடையாது. சட்டத்தை திரும்ப பெறும்வரை நாங்கள் இங்கிருந்து செல்லபோவதில்லை.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ஹாங்காங்கை.. சீனாவின் பெய்ஜிங்க், ஷாங்காய் போல மாற்ற முயற்சிக்கிறார்” என்று குற்றம் சுமத்தினார்.
ஹாங்காங் எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு நாட்டில் இரு அரசு கொள்கைகள் வேலை செய்யாது என்பதை காட்டுக்கின்றது என்று தைவான் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT