Published : 22 Sep 2014 06:23 PM
Last Updated : 22 Sep 2014 06:23 PM

ஐ.நா. பொதுமன்றத்தில் செப்.26-ல் பாக். பிரதமர் உரை

ஐ.நா. பொதுமன்றத்தில் செப்டம்பர் 26-ம் தேதியன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றவுள்ளார்.பாகிஸ்தான் நாட்டின் அசோசியேடட் பிரஸ் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புதன் கிழமை அமெரிக்கா செல்கிறார் எனவும் அச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பிரதமரின் அதிகாரப்பூர்வ சந்திப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x