Published : 22 Feb 2019 03:11 PM
Last Updated : 22 Feb 2019 03:11 PM

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

சிரியாவில் தீ விரவாதிகளால் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்த உள்நாட்டுப் போரில்  குர்து இனப் போராளிகளுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இறுதிக்கட்ட போர் நடந்து வருகிறது.  ஐஎஸ் தீவிரவாதிகள் அரசுக் கட்டுப்பாட்டு பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து  சிரிய ஜனநாயக படைகள் கூறும்போது ,  ”சிரியாவில்  அரசுக் கட்டுப்பாட்டு பகுதியில் வியாழக்கிழமை தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகினர். இதில் பலர் தொழிலாளர்கள். இந்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.: என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள உள்ள கடைசிப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் 200 குடும்பங்களை வெளியேற விடாமல் ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர் என்று முன்னர் செய்தி வெளியான நிலையில் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x