Published : 20 Aug 2018 04:02 PM
Last Updated : 20 Aug 2018 04:02 PM

இத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

இத்தாலியில் பாலம் இடிந்ததில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் பிரபலமான பாலம் மொரண்டி. இப்பாலம் 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  ஜினோ  நகரத்தில் ஏ10 என்னும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  இப்பாலத்தின் சாலை பிரான்ஸ்க்கு செல்லும் வழியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொரண்டி பாலத்தின்  நடுப்பகுதி செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது. அப்போது அப்பாலத்தில் போக்குவரத்து நெரிசலில்  நின்று கொண்டிருந்த 30  கார்களும் கீழே விழுங்கி நொறுங்கின. இதில் 20 பேர் பலியாகி இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

பாலம் இடிந்து விழுந்த சம்பவத்துக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர். இத்தாலியிலுள்ள கட்டுமான அமைப்பு குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x