Published : 06 Jul 2018 08:58 AM
Last Updated : 06 Jul 2018 08:58 AM

ஆப்கனில் தீவிரவாதிகள் 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட குண்டு வீச்சில் தலிபான் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலி பான் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் விமானம் மூலம் நடத்திய குண்டு வீச்சில் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 4 தீவிரவாதிகளும் பலியாயினர். இதை ஆப்கன் ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ரட்மானிஷ் தெரிவித்தார். அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் ரட்மானிஷ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x