Published : 31 May 2018 02:27 PM
Last Updated : 31 May 2018 02:27 PM
அமெரிக்க படைகள் சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆசாத் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என விரும்புகிறேன். சிரியா எல்லையோரத்தில் குர்திஷ் தீவிரவாதிகளின் ஆதிக்க பகுதிகள் மற்றும் வடக்கு புறத்தில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா வெளியேற வேண்டும். இல்லையேல் எங்கள் படைகளால் விடுவிக்க வைப்போம்” என்றார்.
மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிரிய போர் குறித்து, ஆசாத்தை ’மிருகம் ஆசாத்’ என்று குறிப்பிடத்தற்கு அவர் என்னவாக இருக்கிறாரோ அதைப் பற்றி கூறி இருக்கிறார் என்று பதில் அளித்தார்.
சிரியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் செயல்பட்டு வந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT