Published : 07 Aug 2014 10:00 AM
Last Updated : 07 Aug 2014 10:00 AM
விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டு கால போரின்போது காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க இலங்கை அரசு நியமித்த குழுவின் காலவரம்பு 7 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் காலத்தை 2015ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்க அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டார்.
மேலும் 3 பேர்
3 பேர் இடம்பெற்றுள்ள இந்த குழுவில் சர்வதேச வல்லுநர்கள் 3 பேர் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்று ராஜபக்ச செவ்வாய்க்கிழமை கூறினார். 2013ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இது வரை இந்த குழு சுமார் 19000 புகார்கள் மீது விசாரணை நடத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT