Last Updated : 02 Feb, 2018 03:58 PM

 

Published : 02 Feb 2018 03:58 PM
Last Updated : 02 Feb 2018 03:58 PM

தென் ஆப்.,தங்க சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 955 தொழிலாளர்கள் மீட்பு

தென் ஆப்பிரிக்கா தங்க சுரக்கத்தில் சிக்கிக் கொண்ட 955 தொழிற்லாளர்கள் எந்தவித காயமுமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் வெல்காம் நகரத்துக்கு அருகிலுள்ள தியுன்சென் நகரிலுள்ள தங்கம் சுரங்கம் ஒன்று உள்ளது.

இந்தத் தங்க சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடையினால் அதில் பணிபுரிந்த 955 தொழிலாளர்கள் கடந்த புதன்கிழமை சிக்கிக் கொண்டனர். தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு ஒரு நாள் ஆகியும் அவர்களை மீட்க முடியவில்லை. பின்னர் பொறியாளர்கள் தொடர்ந்து முயன்று பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஒருவழியாக  955 தொழிளார்களும் மீட்கப்பட்டனர்”  என்று தென் ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அந்த சுரங்கத்தின் நிறுவனர் கூறும்போது, "அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிலருக்குஇ குறைந்த அளவு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது" என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x