Published : 27 Jan 2018 12:53 PM
Last Updated : 27 Jan 2018 12:53 PM

ரஷ்ய அமைதி மாநாட்டை புறக்கணிப்பதாக சிரியா எதிர்க்கட்சி தரப்பு அறிவிப்பு

அடுத்தவாரம் ரஷ்யா மேற்கொள்ளும் அமைதி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று சிரிய எதிர்க்கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபையின் முயற்சியின்பேரில் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் அதிபர் ஆசாத், எதிர்க்கட்சிகள் இடையிலான 2 நாள் அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 25-ம் தேதி நடந்தது.

இந்த நிலையில் ரஷ்யா மேற்கொள்ளவிருக்கும் அமைதி பேச்சுவார்த்தை குறித்து சிரிய எதிர்க்கட்சிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “அடுத்தவாரம் ரஷ்யா மேற்கொள்ளவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை புறக்கணிக்கிறோம். வியன்னாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அனைத்து சுற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அதற்கான விளைவை நாங்கள் பார்க்கவில்லை. ஐ. நாவின் அமைதிக் குழு, சிரிய அரசின் கூட்டாளியாக உள்ளது” என்றார்.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் சில மிதவாத எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x