Published : 07 Jan 2018 10:38 AM
Last Updated : 07 Jan 2018 10:38 AM

ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 28-ம் தேதி முதல் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியபோது, “ஈரானில் மக்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். அவர்கள் அடிப்படை உரிமைகளைக் கோருகின்றனர். உல கம் உங்களை (ஈரானை) உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

பிரான்ஸ், ரஷ்யா, சீனாவின் தூதர்கள் பேசியபோது, “ஈரானில் இப்போது நடைபெறும் போராட்டங்களால் உலக அமைதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த விவகாரத்தை பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பது பொருத்த மாக இருக்காது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x