Last Updated : 09 Jan, 2018 03:55 PM

 

Published : 09 Jan 2018 03:55 PM
Last Updated : 09 Jan 2018 03:55 PM

ட்ரம்ப் டவர் கட்டிடத்தில் தீ விபத்து: 3 பேர் காயம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு சொந்தமான 'ட்ரம்ப் டவர்' கட்டிடம் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை தரப்பில், ''நியூயார்க் நகரில்  நகரில் அமைந்துள்ள 'ட்ரம்ப் டவர்' கட்டிடத்தின் மேற்பகுதியில் அதிகாலை தீப்பற்றிக் கொண்டது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. உயிர் சேதம் ஏற்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ட்ரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், '' 'ட்ரம்ப் டவர்' கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்த கூலர் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சிறந்த முறையில் தங்கள் பணியை செய்து தீயை அணைத்து விட்டனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான இக்கட்டிடத்தில்தான்  ட்ரம்ப்பின் தலைமை அலுவலமாக உள்ளது.

கட்டிடத்தில் ஏற்பட்ட தீ  விபத்து காரணமாக அப்பகுதியில் புகையால் சூழப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x