Published : 23 Jan 2018 10:33 AM
Last Updated : 23 Jan 2018 10:33 AM

மத பள்ளியை விட்டு வெளியேறியதால் ஆத்திரம்: பாகிஸ்தானில் சிறுவனை கொன்ற மதகுரு கைது

பாகிஸ்தானில் பின் காசிம் நகரில் உள்ள ஒரு மத பள்ளி யில் முகமது ஹுசைன் என்ற 8 வயது சிறுவன் படித்து வந்தான். அவன் அந்தப் பள்ளியை விட்டு வெளியேற முயன்றுள்ளான். அப்போது அவனை மடக்கிப் பிடித்துள்ளார் மதகுரு காரி நஜ்முதின். பின்னர் அவனை அடித்து உதைத்துள்ளார். அதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக புகார் கிடைத்ததையடுத்து, மதகுருவை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்..

பாகிஸ்தானில் வறுமையில் வாடும் பெற்றோர், இஸ்லாமிய குழுக்களால் நடத்தப்படும் மத பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து விடுகின்றனர். இந்தப் பள்ளிகளில் குழந்தைகளை மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவதாக சர்வதேச அளவில் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x