Last Updated : 29 Dec, 2017 11:51 AM

 

Published : 29 Dec 2017 11:51 AM
Last Updated : 29 Dec 2017 11:51 AM

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 12 பேர் பலி

நியூயார்க் நகர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து நியூயார்க் நகர மேயர் பில் டே பிளாசியோ கூறும்போது, "நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். நியூயார்க் நகரில் கடந்த வருடங்களில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த தீ விபத்தில் பலியானவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்." என்றார்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தரப்பில், “வியாழக்கிழமை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது” என்றார்.

விபத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூறும்போது, “எனது தோழி ஒருவர் அந்த குடியிருப்பில்தான் வசித்து வருகிறார். தீ விபத்து ஏற்பட்டபோது அவர் ஜன்னல் ஓரம் நின்று கொண்டிருந்தார். அவரை ஜன்னல் கண்ணாடியை உடைத்து மீட்டனர்” என்றார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.விபத்து குறித்து போலீஸார் விசராணை நடத்தி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x