Published : 29 Dec 2017 10:33 AM
Last Updated : 29 Dec 2017 10:33 AM
கம்போடியாவில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுகிறது. கடந்த 4-ம் தேதி தாக்கோ மற்றும் கென்டல் பகுதிகளில் போலீஸார் நடத்திய சோதனையில் சேவல் சண்டைகளில் ஈடுபடுத்தப்பட்ட 92 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கம்போடிய பிரதமர் ஹுன் சென்னின் உறவினர் ஹதாய் பானி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் 92 சேவல்களையும் கொன்றுவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸாரின் உணவுக்காக 92 சேவல்களையும் உயரதிகாரிகள் பரிசாக வழங்கினர். அவர்கள் அந்த சேவல்களை சமைத்து ருசித்து சாப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT