Published : 29 Dec 2017 10:38 AM
Last Updated : 29 Dec 2017 10:38 AM
இரண்டாம் உலகப்போரின்போது தென்கொரியாவில் இருந்து கடத்தப்பட்ட பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களுக்கு பாலியல் அடிமைகளாக (கம்பர்ட் வுமன்) மாற்றப்பட்டனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்க ஜப்பான், தென்கொரியா இடையே 2015 டிசம்பரில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இமாலய தவறுகள் உள்ளன. அதனை ஏற்க மாட்டோம் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், சியோலில் நேற்று தெரிவித்தார்.
தென்கொரிய மகளிர் அமைப்புகள் கூறியபோது, ஜப்பானிய அரசு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முன்பு எங்களின் கருத்துகளைக் கேட்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளன. இதன்காரணமாக இருநாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் எழும் அபாயம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT