Published : 30 Dec 2017 03:51 PM
Last Updated : 30 Dec 2017 03:51 PM

ஈரானில் ஆடை கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்

ஈரானில் இனி ஆடை கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெஹ்ரான் போலீஸார் தரப்பில், "இஸ்லாம் ஆடை விதிமுறைகளை மீறுபவர்கள் இனி கைது செய்யப்பட மாட்டர்கள். நீதிமன்ற வழங்குகள் அவர்கள் மீது பதியப்படாது"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக ஈரானில் பெண்கள் தங்கள் முடி உட்பட முற்றிலும் மறைக்கப்பட்ட தளர்வான ஆடையை அணிய கட்டாயப்படுத்தப்பட்டனர்.இதனை எதிர்த்து பெண்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்களும் மேல் ஆடை இல்லாமல் பொது இடங்களில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது

இந்த நிலையில், ஈரான் அதிபராக மீண்டும் ஹசன் ரஹ்கானி இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தெடுக்கப்பட்டப் பிறகு ஈரானில் சீர்திருத்தம் எண்ணம் கொண்ட இளம் வயதினர் அந்நாட்டிலுள்ள ஆடை விதிமுறைகளை பற்றியும், அதனை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் குறித்து முறையிட்டனர்.

அதன் விளைவாகதான் இந்த அறிவிப்பை ஈரான் அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x