Published : 18 Dec 2017 10:27 AM
Last Updated : 18 Dec 2017 10:27 AM

விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட வீரர்கள் குழு: 6 மாதங்கள் தங்கி தீவிர ஆராய்ச்சி

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 6 மாதப் பயணமாக 3 பேர் அடங்கிய விண்வெளி குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஸ்காட் டிங்கில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அன்டன் ஷிகபிலரோவ், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நோரிஷிகே கனாய் ஆகிய 3 பேர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர். இவர்கள் ரஷ்யா தயாரித்துள்ள சோயுஸ் எம்எஸ்-07 ரக விண்கலத்தில் புறப்பட்டனர்.

கஜகஸ்தானிலுள்ள பைக்கானூர் விண்வெளி தளத்திலிருந்து நேற்று பிற்பகல் இவர்களது விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணமானது. இந்தக் குழு விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய விண்வெளி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலமானது, வரும் செவ்வாய்க்கிழமை சர்வதேச விண் வெளி நிலையத்துடன் இணை யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று பேரில் டிங்கிள், கனாய் ஆகியோர் முதல்முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அதே நேரத்தில் பிளைட் கமாண்டர் ஷிகபிலரோவ், 2 முறை விண்வெளிக்குச் சென்று வந்த அனுபவம் உள்ளவர். இந்த முறை அவர் விண்வெளி நிலையத்தில் தனது பிறந்த நாளை பிப்ரவரியில் கொண்டாடவுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x