Last Updated : 16 Nov, 2017 02:48 PM

 

Published : 16 Nov 2017 02:48 PM
Last Updated : 16 Nov 2017 02:48 PM

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் வழிப்பறி கும்பலால் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 21 வயது இந்திய மாணவர் ஒருவர், பல்பொருள் அங்காடியில் நான்கு பேர் கொண்ட வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு துப்பாக்கியால்  சுடப்பட்டு மரணமடைந்திருக்கிறார்.

அந்த நான்கு பேரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் இருந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜாசர் என்பதும் அவர் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கான விசாவின் மூலம் அமெரிக்காவுக்கு வந்துள்ளார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொலை தொடர்பாக 22 வயதான அத்வால் என்ற இந்திய நபரை போலீஸார் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x