Published : 01 Nov 2017 02:26 PM
Last Updated : 01 Nov 2017 02:26 PM
கணவர் உட்பட 14 பேரை லஸ்ஸியில் விஷம் கலந்து கொன்றதாக பாகிஸ்தானில் புது மணப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண போலீஸார் கூறும்போது, "கைது செய்யப்பட்டுள்ள ஆசியா பீவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் அவரது பெற்றோரால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திருமணத்தில் ஆசியாவுக்கு விருப்பமில்லை.
இதனைத் தொடர்ந்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கொல்வதற்கு திட்டம் தீட்டிய ஆசியா, லஸ்ஸியில் விஷம் கலந்து அவரது கணவர் மற்றும் உறவினருக்கு அளித்துள்ளார்.
இதில் ஆசியாவின் கணவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் ஆசியா பீவிதான் அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினருக்கும் விஷம் கொடுத்து கொன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆசியா பீவி கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று கூறினார்.
தற்போது இந்த வழக்கு பாகிஸ்தானின் முசாபர்கர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT