Published : 07 Nov 2017 11:03 AM
Last Updated : 07 Nov 2017 11:03 AM

வியட்நாமில் சூறாவளியால் 50 பேர் பலி

வியட்நாமின் தெற்குப் பகுதியை தாக்கிய சூறாவளி புயலால் 50 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 27 பேரை காணவில்லை.

தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் நாடு அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வியட்நாமின் தெற்குப் பகுதியான கான் ஹோ மாகாணத்தை டேம்ரே என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் தாக்கியது.

அப்போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நிஹா டிராங் உட்பட பல்வேறு நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. 2000 வீடுகள் இடிந்தன. 80 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.

டேம்ரே சூறாவளி புயல் காரணமாக மொத்தம் 50 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 27 பேரை காணவில்லை. அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த செப்டம்பரில் வியட்நாமை சூறையாடிய புயலால் 80 பேர் உயிரிழந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x