Published : 02 Nov 2017 09:25 AM
Last Updated : 02 Nov 2017 09:25 AM
சவுதி அரேபிய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏமன் நாட்டில் 21 பேர் பலியாகினர்.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவம் ஹவுத்தி கிளர்ச்சிப் படை மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏமனின் பல பகுதிகள் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு சடா மாகாணம், சுஹர் பகுதியை குறிவைத்து சவுதி ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை ஓட்டல் மீது விழுந்து 21 பேர் இறந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT