Published : 02 Nov 2017 12:34 PM
Last Updated : 02 Nov 2017 12:34 PM
ஊழல் வழக்கில் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
பாகிஸ்தானில் பனாமா கேட் ஊழல் விவகாரத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிபை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் நவாஸ் பதவி விலகினார். அவர் மீதான ஊழல் வழக்குகளை பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நவாசின் மனைவி கல்சூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரிட்டன் தலைநகர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக, நவாசும் அங்கேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இரண்டு ஊழல் வழக்குகளில் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் இன்று பிரிட்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக முடிவு செய்துள்ளார். இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT