Published : 07 Nov 2017 12:51 PM
Last Updated : 07 Nov 2017 12:51 PM
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைக்கு காஷ்மீர் விடுதலை தீர்வாக இருக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி தெரிவித்துள்ளார்.
லண்டனில் பாகிஸ்தான் மாணவர்கள் பங்கேற்ற கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அப்பாஸி இதனைத் தெரிவித்தார்.
கருந்தரங்க நிகழ்வில் அப்பாஸி பேசியதாவது, "காஷ்மீர் விடுதலைக்கான ஆதரவு எங்கும் இல்லை. ஆனால் காஷ்மீர் விடுதலைக்கான கருத்து மிதந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினையை தீர்ப்பதற்கு வெறும் காஷ்மீர் விடுதலை மட்டும் தீர்வாக இருக்காது.
நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்பதில் தீர்மானமாக இருக்கிறோம். இரண்டு நாடுகளிடமும் அணுஆயுதங்கள் உள்ளன. ஆனால் போரில் எங்களுக்கு விருப்பம் இல்லை.
பயங்கரவாதம் பாகிஸ்தானிலிருந்து வெளிப்படுவதாக கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து. பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. நாம் இந்த தவறான கருத்திலிருந்து நம்மை விடுவிக்க தொடர்ந்து நாம் போராட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து மாணவர்களிடையே உரையாற்றிய அப்பாஸி அவர்களது கேள்விக்கு பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT