Published : 02 Nov 2017 09:23 AM
Last Updated : 02 Nov 2017 09:23 AM
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று அரசு முறை பயணமாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவுகானியை சந்தித்துப் பேசினார்.
ரஷ்யாவில் இருந்து அஜர்பைஜான், ஈரான் வழியாக இந்தியாவை இணைக்கும் வடக்கு-தெற்கு ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து புதினும் ஹசன் ரவுகானியும் முக்கிய ஆலோசனை நடத்தினர். மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டிவரும் விவகாரம் குறித்தும் புதின் ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT