Published : 31 Oct 2017 02:01 PM
Last Updated : 31 Oct 2017 02:01 PM

இத்தாலியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்

வடக்கு இத்தாலியில் உள்ள மிலானி நகரில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து மிலானியிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில், "இத்தாலியிலுள்ள மிலானி நகரில் இந்திய மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது.

இங்குள்ள இந்திய மாணவர்கள் பயம் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தை சட்டபூர்வ முறையில் இந்திய அதிகாரிகள் கொண்டு செல்வார்கள்'' என்று பதிவிட்டுள்ளனர்.

இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்தத் தாக்குதல் நிறவெறி தாக்குதல் இல்லை என்று இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை பெற்றிருக்கிறேன். தொடர்ந்து அங்கு நிலைமை கண்காணிக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x