Published : 07 Dec 2022 06:00 AM
Last Updated : 07 Dec 2022 06:00 AM

டிச.07: இன்று என்ன? - டைகர் ஜதீன்

டைகர் ஜதீன் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஜதீந்திரநாத் முகர்ஜி. வங்கதேசம் நாதியா மாவட்டம் கயாகிராம் கிராமத்தில் 1879-ல் டிசம்பர் 7-ம் தேதி பிறந்தார். கோடுய் நதிக்கரையில் இவர் மீது புலி பாய்ந்தது.

சிறு கத்தியை கொண்டு போராடி புலியை கொன்றார். அன்றுமுதல் பாகா ஜதீன், டைகர் ஜதீன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். ராஷ்பிகாரி போஸ் போன்றவர்களின் பேச்சுக்கள், சுவாமி விவேகானந்தரின் கொள்கை முழக்கங்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டார்.

அனுசீலன் சமிதி என்ற புரட்சி இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டார். ஆங்கில அரசுக்கு எதிராக பல்வேறு புரட்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த ஜதீந்திரநாத் முகர்ஜி, 1915-ல் நடந்த மோதலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்து 36-வதுவயதில் வீரமரணம் அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x