Published : 14 Oct 2022 06:00 AM
Last Updated : 14 Oct 2022 06:00 AM

அக்.14: இன்று என்ன? - கருப்பு காந்தி நோபல் பரிசு பெற்றார்

வெள்ளையின மக்களுக்கு இணையான வேலையும் விடுதலையும் கருப்பின மக்களுக்கு உரித்தானது என்ற முழக்கத்துடன் ஆப்ரிக்க - அமெரிக்க மக்களின் மனித உரிமை இயக்கத்தின் தலைவராக செயலாற்றியவர். “எனக்கொரு கனவு” என்ற அமெரிக்க வரலாற்றின் திருப்புமுனை சொற்பொழிவை ஆற்றியவர். சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது பெற்றவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்துள்ள வலிமை மிகுந்த ஆயுதம் அறப்போராட்டமே என்றவர். ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின், “போரும் அமைதியும்” போன்ற நூல்களை வாசித்த பிறகே வன்முறையற்ற போராட்டம் பற்றி அறிந்து கொண்டவர் மார்ட்டின் லூதர் கிங். இவர் 1964-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். இவரை கருப்பு காந்தி என்று மக்கள் வாஞ்சையுடன் அழைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x