Published : 30 Sep 2022 06:17 AM
Last Updated : 30 Sep 2022 06:17 AM
பள்ளியில் படித்த நாட்களிலிருந்து கல்விசாரா இதர செயல்பாடுகளில் சகலகலா வல்லவனாக திகழ்ந்ததால் யூபிஎஸ்சியில் வெற்றிக் கனியை பறித்த இளம் அதிகாரி டி.சரவணன். மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வு எழுதி 2019-ல் ஐபிஎஸ் அதிகாரியானவர். உத்தரப்பிரதேசம் அலகாபாத் மாநகரக் காவல்துறையின் உதவி கண்காணிப்பாளராக செயலாற்றி வருகிறார்.
முசிறி தாலுகா குணசீலத்தில் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. ஐஓபி வங்கி அதிகாரியான இவர், குழந்தைகளின் கல்விக்காக மனைவி இந்திராகாந்தியுடன் ரங்கத்தில் குடியேறினார். இந்த தம்பதியின் மூன்றாவது குழந்தை டி.சரவணன். எல்கேஜி முதல் 10-ம் வகுப்புவரை அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியில் பயின்றார் சரவணன். சிபிஎஸ்இ முறையில் படித்து வந்தவர் பிளஸ் 1-ல் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்து ஆர்.எஸ்.கிருஷ்ணன் மேல்நிலைப் பள்ளிக்கு மாறியுள்ளார். கோயம்புத்தூரின் அமிர்தா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பிடெக் முடித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT