Published : 26 Sep 2022 06:12 AM
Last Updated : 26 Sep 2022 06:12 AM
இயற்கையிடம் ஏராளமான கணிதம் இருக்கிறது. ஆனால் அதை உள்வாங்க நெடுங்காலம் எடுத்துக்கொண்டது. இன்றுகூட நாம் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இயற்கையின் விசித்திரங்களை நெடுங்காலமாகக் கற்றுக்கொண்டேதான் இருக்கின்றோம். நதிகள் மனித வாழ்வில் பெரும் அங்கம் வகிக்கின்றன. எல்லா நாகரிகங்களும் ஏதோ ஒரு நதியைக் கொண்டே இருக்கும். நதி இருந்தால்தான் நாகரிகம். ஹரப்பா, மொகஞ்சதாரோ, சிந்து, கீழடி எல்லா நாகரி கத்தின் பின்னும் நதி இருந்துள்ளது.
காலக்கணக்கீடு: நதி மனிதனின் கணிதக் கண்டுபிடிப்பு களுக்கு வித்திட்டது. நதியின் அருகே மனிதன் நகரத்தை அமைக்கின்றான். விவசாயம் செய்யத் தொடங்குகின்றான். ஆனால் எந்த நேரத்தில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருகின்றது, எந்த நேரத்தில் தண்ணீர் வருவது குறைவு எனக் கணக்கிடுகின்றான். அங்குதான் பெரிய சிக்கல் வருகின்றது. இப்போது நாம் எளிதாக ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி எனச் சொல்லி விடுகின்றோம். இவை எல்லாம் அப்போது உருவாகவில்லை. பூமி தட்டையாக இருக்கும் என்றுதானே சில நூற்றாண்டுகள் முன்னர் வரை நினைத்திருந்தோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT