Last Updated : 22 Jan, 2024 03:40 AM

 

Published : 22 Jan 2024 03:40 AM
Last Updated : 22 Jan 2024 03:40 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை 25: பதறாத காரியம் சிதறாது

செப்படி வித்தைக்காரனான தத்தனிடம் குணபாலன் கொடுத்து வளர்க்கச் சொன்ன கழுகுக் குஞ்சுகள் சிறப்பாக வளர்ந்துவிட்டதைக் கண்ட குணபாலனுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தத்தனைப் பாராட்ட வார்த்தைகளே இல்லாமல், அவனைக் கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குணபாலன், ‘எங்கே, நானும் அவற்றுக்குத் தீனி போட்டு அவற்றுடன் பழகுகிறேன்’ என்றான். கழுகுக் குஞ்சுகளுக்காக ஏரி மீன்களைப் பிடிக்கத் தூண்டிலை எடுத்துக்கொண்டு சென்றான். தத்தனும் அவனோடு சேர்ந்து புறப்பட்டான்.

இருவரும் அமைதியான அந்த ஏரிக்கரையில் ஒரு பாறையின் மீதுஅமர்ந்து தூண்டிலைப் போட்டுக்கொண்டு மீனுக்காகக் காத்திருந்தார்கள். அப்போது அந்த அமைதியைக் குலைத்தவாறு ஏதோ சத்தம் தொலைவில் கேட்டது. உடனே குணபாலன், ‘தத்தா, அதென்ன சத்தம்? உனக்குக் கேட்டதா?’ என்றான். அதற்கு தத்தன், ‘ஆம், குணபாலா, எனக்கும் கேட்டது. நீ தூண்டிலைப் போட்டுக்கொண்டிரு. நான் சென்று என்ன சத்தம் என்றுபார்த்து வருகிறேன். என்றவாறு கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த காட்டினுள் நுழைந்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x