Published : 18 Dec 2023 04:34 AM
Last Updated : 18 Dec 2023 04:34 AM
அரண்மனைக்குத் தூதுவனாக சென்று, திருத்தோன்றியின் ஆட்களின் கண்களில் மண்ணைத் தூவி, காட்டிற்குள் புகுந்து தப்பித்துத் தன் சொந்த ஊருக்குச் சென்றான் குணபாலன். அங்கு அவனைக் கண்ட அவனது பெற்றோர், தங்கை, உறவினர், ஊராருக்கு ஒரு கணம் திகைத்துப் போனார்கள். அவனை திருச்சேந்தியின் ஆட்கள் கொன்று போட்டிருப்பார்கள். அவன் திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென அவன் அங்கு சென்றதும் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள்.
அங்கு கூடி இருந்த கூட்டத்தினரைப் பார்த்து குணபாலனின் தந்தை, எனது மகன் குணபாலன் உயிருடன் வருவான் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. எல்லாம் இறைவனின் திருவிளையாடல். அத்துடன் உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் கூட. உங்கள் நல்ல எண்ணங்களே அவனை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. மேலும் குணபாலன் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இப்போதுதான் வந்துள்ளான். எனவே பரபரப்பைக் கூட்டாமல் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்றார். அவரது பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட குணபாலன், என் மேல் நீங்கள் அனைவரும் இத்தனை அன்பு வைத்துள்ளதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படிப்பட்ட உங்களுக்காக நான்சாகத் துணிந்ததில் தவறு ஏதும் இல்லைதான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT