Last Updated : 11 Dec, 2023 04:31 AM

 

Published : 11 Dec 2023 04:31 AM
Last Updated : 11 Dec 2023 04:31 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை 22: இளவரசியின் விருந்தோம்பல்

மன்னர் சங்கடசேனனுடன் பேசிக்கொண்டிருந்த குணபாலனை அங்கு எதிர்பார்த்திராத இளவரசி மதிவதனிக்கு திடீரென குணபாலனைக் கண்டதும் முதலில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவனைத் துரத்திச் சென்ற வீரர்களின் பிடியில் அகப்படாமல், அந்த மலைச்சிகரத்திலிருந்தே குதித்தவன் ஆயிற்றே? அப்போதே அவன் உயிர் பிழைத்தானோ இல்லையோ என்று பதறிப் போனது இளவரசி மதிவதனியின் மனம். இப்போதும் இவனுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், இந்த முறை அவன் கேட்காமலேயே தன்னாலான உதவிகளைச் செய்வது என்று முடிவெடுத்தாள்.

அவன் விடைபெற்றுச் செல்வதைக் கண்ட அவள் தன் தந்தையை நோக்கி, தூது கொண்டுவந்த தூதுவரை வெறும் கையோடு அனுப்பலாமா? அப்படியானால், நம்மைப் பற்றி தூது அனுப்பிய பக்கத்து நாட்டு அரசர் என்ன நினைப்பார்? என்று கேட்டாள். அப்படியே அவனை நோக்கி, தூதனே, எங்கள் நாட்டு விருந்தோம்பலைக் கேள்விப்பட்டு இருக்கிறாயா? பரவாயில்லை. இப்போது நேரிலேயே பார்க்கலாம் என்றாள். மேற்கொண்டு அவள், யாரங்கே? என்றதும் இரண்டு தாதிப் பெண்கள் ஓடோடி வந்தனர். அவர்களிடம், நமது அரண்மனைக்கு வந்த இந்த விருந்தினரை விருந்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்று பசியாற்றுங்கள். மேலும் அவர் கேட்பதைக் கொடுத்து அனுப்புங்கள் என்றாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x