Last Updated : 06 Nov, 2023 04:34 AM

 

Published : 06 Nov 2023 04:34 AM
Last Updated : 06 Nov 2023 04:34 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை - 18: ஆட்டுமந்தைக் கூட்டமாய் ஆட்டம் போட்ட மனிதர்கள்

குணபாலனின் பிடியிலிருந்த செப்படி வித்தைக்காரன், ’ஒவ்வொருவரிடமும் ஒரு நியாயம் உள்ளது. அதைக் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும்’ என்றதும் குணபாலன் செப்படி வித்தைக்காரனைத் தன் பிடியிலிருந்து விடுவித்து அவன் சொல்லப்போகும் கதையைக் கேட்க ஆயத்தமானான். பிடியிலிருந்து விடுபட்ட செப்படி வித்தைக்காரனும் தனது தலையை இருபுறமும் சாய்த்து தனது உடலை தளர்த்திக்கொண்டான். பிறகு திரும்பி நின்று குணபாலனை மேலும் கீழுமாக ஒருமுறை பார்த்தான். அவன் பார்வையில் இருந்த பயம் விலகி, இப்போது ஓர் அலட்சியம் குடிகொண்டிருந்தது. அவன் தனது கதையை சொல்லத் தொடங்கினான்.

எனது பெயர் தத்தன். நான் மாட மாளிகைகளையும் கோபுரங்களையும் உருவாக்கிக் கொடுக்கும் கட்டிடக்கலை நிபுணன் ஆவேன். எனது தந்தை தேவதத்தன்தான் தேவலோகங்களையும் நிர்மாணித்தார். எனது தாத்தா…என்று அவன் சொல்லத் தொடங்கும் முன் இடைமறித்த குணபாலன், போதும் தத்தா, நீ உன்னைப் பற்றி மட்டும் சொல் என்றான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x