Published : 30 Oct 2023 07:14 AM
Last Updated : 30 Oct 2023 07:14 AM

ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை - 17: கல்வியின் ருசி என்ன?

கல்வி என்றால் என்ன என்ற தெளிவு சமூகத்திற்கு இருக்கிறதா? கல்வி என்றால் என்ன? வாழ்நாளில் உணர்வோடு விழித்திருக்கும் நேரமெல்லாம் கொஞ்சமாவது கற்றல் கற்பித்தல் நிகழ்கிறது என்று கல்வியைத் தத்துவார்த்தமாகச் சொல்லலாம். ஆனால் வாழ்விலிருந்து பாடங்களைக் கற்பது ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து நிகழ்ந்திருந்தால் சமூகத்தில் நிகழும் பல்வேறு கேடுகளும் குறைந்து கொண்டே வர வேண்டும். மாறாகச் சீர்கேடுகள் அதிகரித்து வருவதால் சமூகத்தில், அனுபவங்களில் இருந்து கற்றல் மிக மிக மெதுவாக நிகழ்கிறது என்பது தெளிவு.

பல்வேறு தளங்களில் கல்வி இருக்கிறது என்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி தனித்தன்மையானது. வீடு, சமூகத்தின் நேரடி அழுத்தங்கள் இல்லாமல் கல்வி நிகழும் நிறுவனங்களாக அவை இருக்கின்றன. கல்வி என்பது, ஒரு குழந்தை பாடங்களில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமல்ல. பண்புகள், திறன்களில் வளர்ச்சியும் சேர்ந்ததே என்றும் சொல்லலாம். சென்ற வாரத்தில் இரண்டுநாட்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களோடு கல்வி குறித்துக் கலந்துரையாடினேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x