Published : 17 Aug 2022 07:30 AM
Last Updated : 17 Aug 2022 07:30 AM

இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை ஆக.25 வரை நீட்டிப்பு

சென்னை: மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக்கல்வி வாயிலாக இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2022 ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர்

https://ignouadmission.samarth.edu.in என்ற இணைப்பை பயன்படுத்தி ஆகஸ்டு 25 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x