Published : 03 Aug 2022 06:36 AM
Last Updated : 03 Aug 2022 06:36 AM

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்துக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய பள்ளி மாணவர்கள்

சிறுசேமிப்பு மூலம் சேமித்த தொகையில் வாங்கிய புத்தகங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.வெங்கட பிரியாவிடம் ஒப்படைத்த எறையூர் புனித ஜோசப் பள்ளி பள்ளி மாணவ- மாணவிகள்.

பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள், தாங்கள் சிறுக சிறுக சேமித்த தொகையில் புத்தகங்கள் வாங்கி, மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்துக்கு வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் அருகேயுள்ள புனித ஜோசப் பள்ளி மாணவ- மாணவிகள் சிலர், தாங்கள் சேமித்த தொகையை பயனுள்ள வகையில் செலவழிக்க முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடம் ஆலோசனை செய்த அவர்கள், ஏதேனும் ஒரு நூலகத்துக்கு புத்தகங்களை வாங்கி நன்கொடையாக வழங்க திட்டமிட்டனர்.

இதன்படி, தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.18,000-ல், 200 புத்தகங்கள் வாங்கினர். பின்னர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியாவைச் சந்தித்தனர்.

புத்தகங்களை மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்துக்கு நன்கொடையாக வழங்க விரும்பு வதாகக் கூறி அவற்றை ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

மாணவ- மாணவிகளின் இந்த நற்செய்கையால் மகிழ்ந்த ஆட்சியர், அனைவருக்கும் சாக்லேட் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியின்போது, பள்ளியின் முதல்வர் சந்தனாசேகர், ஆசிரியை அருட்சகோதரி அந்தோணிமேரி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x