Published : 29 Jul 2022 06:25 AM
Last Updated : 29 Jul 2022 06:25 AM

சிகரத்தை தொட புத்தகம் வாசியுங்கள்: இயக்குநர் பாரதிராஜா

கோவை: புத்தகங்கள்தான் நான் சிகரத்தை தொட உரமாக அமைந்தன என்று கோவை புத்தகத் திருவிழாவில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பேசினார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் ‘எனது திரைப்பட அனுபவங்கள்’ என்ற தலைப்பில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,"நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

சிறு வயதில் வாசித்த புத்தகங்கள்தான் நான் சிகரத்தை தொடுவதற்கு உரமாக அமைந்தன. பள்ளிப் பருவத்தில் தமிழாசிரியர் கொடுத்த ஊக்கத்தால்தான் இயக்குநர் ஆனேன். அந்த காலத்தில் சென்னை எங்கே இருக்கிறது என்பதே எனக்கு தெரியாது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x