Published : 20 Jan 2020 10:40 AM
Last Updated : 20 Jan 2020 10:40 AM
விருதுநகர்
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவ, மாணவிகள் அதிக பரிசுகளை வென்றனர். பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான சைக்கிள் போட்டிகள் திருவண்ணாமலையில் நடத்தப்பட்டன. இதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டி 14, 17 மற்றும் 19 வயது என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 20 கி.மீ. சைக்கிள் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளி மாணவர் பி.நித்திஸ் 2-ம் பரிசை பெற்றார். 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 10 கி.மீ. சைக்கிள் போட்டியில் எஸ்.ஆர்.சுபிக்ஷா முதலிடம் பிடித்தார். 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 20 கி.மீ. சைக்கிள் போட்டியில் ஆர்.மதுமிதா 3-ம் பரிசை வென்றார்.
மாணவி எஸ்.ஆர்.சுபிக்ஷா தொடர்ந்து 4 ஆண்டுகளாக மாநில போட்டியில் பதக்கம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநரும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளருமான வென்குமார், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட விளை
யாட்டு அலுவலர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் முருகன், துணை முதல்வர் திவ்யநாதன், உடற்கல்வி ஆசிரியர் முரசொலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT