Published : 13 Jan 2023 06:08 AM
Last Updated : 13 Jan 2023 06:08 AM

பெண்கள் பாதுகாப்பு: மலையேற்ற வீராங்கனை விழிப்புணர்வு பயணம்

தருமபுரி: பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மலையேற்ற வீராங்கனை ஆஷா மால்வியா புதன்கிழமை தருமபுரி வந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் சாந்தி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷா மால்வியா. மலையேற்றத்தில் தேசியஅளவில் சாதனை புரிந்த வீராங்கனையான இவர் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கிய ஆஷா, புதன்கிழமை தருமபுரி வந்தார். அவரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் வரவேற்று வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x