Published : 25 Nov 2022 06:09 AM
Last Updated : 25 Nov 2022 06:09 AM
கொழும்பு: இலங்கை நாடாளு மன்றத்துக்கு முன்கூட்டியே தேர் தல் நடத்தப்பட மாட்டாது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் சில மாதங்க ளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார். புதிய அதிபராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர் என்பதால் முன்கூட்டியே நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, ‘‘நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக் கடிக்குத் தீர்வு காணாமல் முன்கூட்டியே நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்த முடியாது. போராட்டம் நடத்தி அமைதியைகுலைக்க முயற்சி செய்தால் ராணுவத்தைக் கொண்டு வன்முறை யாளர்கள் ஒடுக்கப்படுவார்கள். நாட்டு நலன்தான் முக்கியம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT