Published : 07 Nov 2022 06:07 AM
Last Updated : 07 Nov 2022 06:07 AM

மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்சினை நாட்டு மக்களுக்கு எதிரானது: குடியரசு துணைத் தலைவர் கருத்து

புதுடெல்லி: ‘‘மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை யாருக் கும் சாதகமானது அல்ல, மாறாக அது நாட்டின் நலன் மற்றும் மக்களின் நலனுக்கு எதிரானது’ என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 7-ஆவது இந்தியா தண்ணீர் வார நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பங்கேற்று ஜெகதீப் தன்கர் பேசியதாவது: கூட்டாட்சி தத்துவத்தின் மீதுஉண்மையான நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நேரமும் வந்திருக்கிறது. இந்த தண்ணீர் பிரச்னை யாருக்கும் சாதகமானது அல்ல; மாறாக அது நாட்டின் நலன் மற்றும் மக்களின் நலனுக்கு எதிரானது.

தண்ணீர், பெட்ரோல், எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் நுகர்வை நாட்டின் பொருளாதார பலத்துடன் தொடர்புபடுத்த முடியாது. அதே நேரம், பொறுப்பற்ற வகையில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. நீர் நிலைகளை புத்துயிர் பெறச் செய்வது மிகப் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனைக் கருத்தில் கொண்டே, அம்ருத் சரோவர் இயக்கத் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்துவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலமாக, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை புத்துயிர் பெறச் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x